29/5/09

இல்லாத இந்திய தேசியமும், இந்தியக் கொடியின் மாற்றங்களும்

1906 ஆம் ஆண்டு இந்தியாவிற்கென ஒரு தேசியக்கொடி தேவை எனக் கருதிய வெளிநாட்டில் வாழ்ந்த சில இந்தியர்களால் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.



1916 ஆம் ஆண்டு சப்தரிசி மண்டலத்தின் சின்னம் மேல் இடது புறமும் யூனியன் சாக் கொடி “தன்னாட்சி” இயக்க காலத்தில் வழக்கத்தில் இருந்தது.

1921 ஆம் ஆண்டு காந்தியால் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் பெசவாடா கூட்டத்தில் ஆதரிக்கப்பட்டு 1931காங்கிரசுக் கூட்டங்களில் பயன்படுத்தப்பட்டது.




1931 ஆம் ஆண்டு காங்கிரசால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கராச்சி கூட்டத்திற்கு பின் அமைக்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்படவில்லை.




1931 ஆம் ஆண்டு ஆகத்து (ஆகஸ்ட்டு) -ல் காந்தியால் கொண்டுவரப்பட்டது. சில மாற்றங்களுடன் பாம்பாய் காங்கிரசில் ஒப்புக்கொள்ளப்பட்டது. செந்நிறம்- மனத்தின்மை, வெள்ளை - உள்ளத்தூய்மை, பச்சை- நம்பிக்கை, வீரம் ராட்டை - மக்களின் நல்வாழ்வு சின்னம் .
1947 ஆம் ஆண்டு ஆகத்து 15(ஆகஸ்ட்டு) சுதந்திர இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஒத்துக் கொல்லப்பட்டது . நடுவில் உள்ள அசோக சக்கரம் அறம் மெய்யுணர்ச்சியின் சின்னம்.
இப்போது இறுதி வடிவமாக இந்தியா காட்டும் வல்லரசியக் கனவுக் கொடி.
நாளை உடைந்து நொறுங்கும் இந்தியாவில்
உருத்திரண்டு எழும் தேசிய இனங்களி்ன் பேரெழுச்சி!
உலக வரைபடத்தில் இன்னும் பல ..,
தேசியக் கொடிகளாய் இன்னும் பல ..,
என இந்தியத்துணைக் கண்டத்தில் தோன்றும்
அதற்காய் களம் காண்போம்!!
படங்கள் - மதுரை காந்தி அருங்காட்சியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக